Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் கைது

யாழில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் கைது

1 year ago
in செய்திகள்

யாழில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (09) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்ட இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற இளைஞனை காரில் கடத்திச் சென்ற குறித்த குழு இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை மற்றுமொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு இளைஞரை கோப்பாய் பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கிற்கு உரித்தான பெண்ணொருவரை கைது செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பணத்தை மீட்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதான நான்கு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதிப்பலகை மட்டக்களப்பில் திறந்து வைப்பு

இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதிப்பலகை மட்டக்களப்பில் திறந்து வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.