ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களை மீட்பதற்காக பொலிஸார், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுக்கள் இணைந்து பரந்தளவிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, தொடர்ச்சியான மழையால் நிலச்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் பாதுகாப்புப் படையினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.








