உயர் பதவியில் உள்ள நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி குற்றப்புலனாய்வு பிரிவு (FCID) ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு 12.02.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.