Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கு தமிழ் பௌத்த காங்கிரசினர் கடிதம்

தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கு தமிழ் பௌத்த காங்கிரசினர் கடிதம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் பௌத்த காங்கிரசினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தையிட்டி விகாரையானது தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சட்டவிரோத விகாரையை அகற்ற முடியாவிட்டாலும், அதற்கு அருகேயுள்ள மக்களது காணிகளையாவது உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.

தையிட்டி விகாரையும், நயினாதீவு விகாரையும் அமரபுரனிகாய என்ற அமைப்பின் கீழ் உள்ளது. எனவே இந்த விகாரை பிரச்சினைக்கு அந்த அமைப்பு தீர்வு வழங்க வேண்டும்.

நயினாதீவு விகாராதிபதிக்கு சொந்தமான காணி 20 பரப்பு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ளது. அந்த காணி மக்களுக்கு வழங்க வேண்டும். தையிட்டி விகாரைக்கு பின்பக்கமாக 8 ஏக்கர் மக்களது காணிகள் உள்ளன. அந்த காணிகளும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையானது தனக்கு தேவையில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஜனாதிபதி மாளிகையை சுற்றுலாத்துறைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையானது சுற்றுலாத்துறைக்கு வழங்குவதால் பல்வேறு விதமான சீரழிவுகள் ஏற்படக்கூடும்.

யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து சமய பீடம் மற்றும் அரங்க கற்கைகள் பீடத்துக்கு தனியான கட்டடம் இல்லை. ஆகையால் ஜனாதிபதி மாளிகையில் அந்த பீடங்களை அமைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பௌத்த காங்கிரசின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன், செயலாளர் கந்தையா சிவராஜா ஆகியோர் இணைந்து இந்த கோரிக்கை கடிதத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா
அரசியல்

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா

August 13, 2026
லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?
செய்திகள்

லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?

August 13, 2026
Next Post
அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் 43 எம்.பிக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை ; முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்

அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் 43 எம்.பிக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை ; முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.