கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (12) மாலை கொடியிறக்கத்துடன் பக்திபூர்வமான நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது.
தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.
இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான புடைசூழ இன்று நடைபெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு வசந்த மண்டபத்தில் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக கொடித்தம்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சிவ சுகுமார குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொடியிறக்கப்பூஜையும் சிறப்பாக நடாத்தப்பட்டது.



























