நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கைகுண்டொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12.08.2026) குறித்த பகுதியில் கைகுண்டொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கித்துள்கலை பொலிஸார், அப்பகுதியை பாதுகாப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையில், மீட்கப்பட்ட கைகுண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அப்பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த கைகுண்டு எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக கித்துள்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மேலும் ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

.









