Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா

2 hours ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் குரல் கொடுக்காது மௌனிகளாக இருப்பது தமிழ் மக்களின் பூர்வீகமான கிழக்கை அவர்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி திட்டமே இந்த ஆறுகட்சிகளின் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணா தெரிவிதத்தார்.

ஈழத்தமிழர் முன்னணி கட்சி நேற்று புதன்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் துறைநீலாவனை வரையும் உள்ள பல சாய்ந்தமருது (கரைவாகுவடக்கு) நிந்தவூர், பாலமுனை, திராய்க்கேணி, மீனோடைக்கட்டு, சம்மாந்துறை, வீரமுனை, பொத்துவில், உட்பட பல கிராமங்களில் உள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு கட்டிடங்களுக்கு தீவைத்து விரட்டியடிக்கப்பட்டு அவர்களின் நிலங்களை கபளீரம் செய்ததுடன் ஆலையங்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல் மற்றும் மீன்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே ஓட்டமாவடியில் காளிகோவிலை உடைத்து அதில் மீன்சந்தை கட்டியதாகவும் அதற்கு நீதவானை கூட தனது அதிகாரத்தை பயன்படுத்து இடமாற்றம் செய்துள்ளதாக நா.உறுப்பினர் எ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இவ்வாறு தமிழர்கள் மீது ஊர்காவல்படை என்ற போர்வையில் தமிழர்கள் மீது கட்டவிழ்துவிடப்பட்டு தமிழர்களை படுகொலை செய்துள்ளனர். இந்த தமிழர்கள் மீது இடம்பெற்ற இந்த அடாவடிக்கு எதிராக அன்றில் இருந்து இன்று வரை தமிழர்களின் பிரதி நிதிகள், தலைவர்கள் என தெரிவித்து வருபவர்கள் எவரும் குரல் கொடுக்காது மௌனிகளாக இருந்து வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுகட்சி 11 ஆசனங்களை பெற்று கொண்டு முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களுக்கு முதலமைச்சு பதவியை தாரைவாத்து கொடுத்தது.

அதேபோல கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கே இந்த 6 கட்சி கூட்டு . அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேச செயலகமான கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தின் கணக்காளரை கூட வழங்க மறுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் நலனில் அல்லது உரிமைக்காக குரல்கொடுப்பார்களா மக்களே சிந்தியுங்கள்.

சோலியன் குடும்பி சும்மா ஆடாது என்ற பழமொழி போல முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கை தமிழ் மக்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக அபகிப்பதற்காகவே இந்த 6 கட்சி கூட்டில் அவர்கள் சோர்ந்துள்ளனர்

எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இந்த கூட்டு கட்சிகளிடம் மிக அவதானமாக விழிப்பாகவும் இருக்க வேண்டும் இல்லையே நாங்கள் எதிர்காலத்தில் கிழக்கு மண்ணைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கடந்த கால ஆட்சியாளர்களுடன் சேர்ந்து அதிகாரங்களை வைத்து தமிழ் மக்களை அழித்தொழித்த சம்பவங்கள் இனி தொடரவிடப்போவதில்லை என்பதுடன் அந்த அராஜகத்துக்கு சட்டரீதியாக ஈழத்தமிழர் முன்னணி முற்றுப்புள்ளிவைக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?
செய்திகள்

லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?

August 13, 2026
‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!
செய்திகள்

‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!

August 13, 2026
Next Post
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.