மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலையம் இயங்கி வருகின்றது. எமது கல்வி வலயத்தில் 23338 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள்.
1638 ஆசிரியர்கள் எமது கல்வி வலயத்தில் கல்வி புகட்ட வேண்டும். அதில் 278 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. விசேடமாக கணிதபாட ஆசிரியர்கள், விஞ்ஞானபாட ஆசிரியர்கள், ஆங்கிலமொழி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள், உள்ளிட்ட பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்டு வருகின்றன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-20.06.48_e5a1da55-1024x461.jpg)
என பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவாதனந்தம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கழமை(15) செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-20.06.49_862dab41-1024x461.jpg)
இதன்போது தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாங்கள் ஆரம்ப கல்வியிலேயே சாதனை படைத்த மாணவர்களைத்தான் கௌரவித்திருக்கின்றோம். ஆனாலும் எமது கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக வேண்டி மாத்திரம் 212 ஆசிரியர்களின் தேவை எமது வயலயத்தில் இருக்கின்றது. அவ்வாறு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்தும் எமது கல்வி வலையம் ஆரம்பக் கல்வி பிரிவிலே பல சாதனைகளை புரிந்துள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் இதற்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவித்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-20.06.51_d15444db-1024x576.jpg)
இதன்போது கல்வில் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவிவரும் அரசாங் அதிபரை வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்திருந்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-20.06.51_8ce95089-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-20.06.52_417506ea-1024x576.jpg)