நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த யோசனை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த முன்மொழிவு அமைச்சரவைக்கு வந்தால் அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களில் நிலவும் வழக்குத் தேக்கத்தை குறைப்பதற்காக புதிய நீதிபதிகளை நியமிப்பதோடு, ஓய்வுபெறும் வயதையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீதித்துறையிலிருந்தே முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








