கொழும்பில் பாமன்கடை பகுதியில் வைத்து காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த போதே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை விபத்து ஏற்பட்ட பின்னர் கார் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.