உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் கிராமட்டோபில்லம் ஸ்பீசியோசம் (Grammatophyllum speciosum) இன மலர்கள், 16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் மீண்டும் பூத்துள்ளன.
2022ஆம் ஆண்டு நடவு செய்யப்பட்ட இந்த அரிய தாவரத்தில் முதல்முறையாக தற்போது மலர்கள் பூத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இந்த இன மலர்கள் 2010ஆம் ஆண்டு காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு முதல் மூன்று மீற்றர் உயரம் வரை பூங்கொத்துகள் வளரும் இந்த ஓர்க்கிட், உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகப் பதிவாகியுள்ளது. இந்த அரிய மலரைக் காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பேராதனை அரச தாவரவியல் பூங்கா அழைப்பு விடுத்துள்ளது.









