2025 இல் வரி செலுத்துவோருக்கு அடிப்படை நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த விடயங்களை இன்றைய வரவுசெலவு திட்ட முன்மொழிவு வாசிப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம், வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசாங்கம் நீதியை உறுதி செய்யும் என குறிப்பிட்டார்.
அத்தோடு, வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக வரி முறை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறதகாவும் ஜனாதிபதி கூறினார்.