Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இயக்குநர் ஷங்கரின் எந்திரன் படம் தொடர்பில் வழக்கு; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

இயக்குநர் ஷங்கரின் எந்திரன் படம் தொடர்பில் வழக்கு; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பண மோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ், இயக்குநர் ஷங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையாச் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தப் படம் எந்திரன். மிகப்பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் ரூ. 290 கோடி வசூல் செய்தது.

ஆனால், எந்திரன் படத்தின் கதை தன்னுடைய ‘ஜூகிபா’ புத்தகத்தின் கதை என அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2011ம் ஆண்டு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், ஜூகிபா புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், ‘எனது கதையைத் திருடி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இது காப்புரிமை சட்டம் 1957 மற்றும் ஐபிசி 1860 ஆகியவற்றை மீறிய குற்றம்’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு இடைக்கால தடை விதித்தது. பின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் எழும்பூர் நீதிமன்றம் வழக்கை நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜூகிபா கதை ஆசிரியர் தொடர்ந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
Next Post
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.