கிழக்கிலங்கையில் மட்டு வாழைச்சேனை என்னும் பிரதேச பேத்தாழை கிராமத்தில் அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரதம் 26/02/2025 புதன்கிழமை அன்று விசேட நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாவது,
மேற்படி எதிர்வரும் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு நான்கு சாமப்பூஜை வழிபாடுகள் மற்றும் அதனை சிறப்பிக்கும் வகையில் எமது ஆலயத்தில் வருடந்தோறும் சைவ சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் நடாத்துவது வழக்கம்.

அதன் அடிப்படையில் அதே போன்று இந்த வருடம் 2025 ஆம் ஆண்டும் எமது ஆலயத்தில் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி தினத்தன்று ஆலய அரங்கிலே சைவ சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் நடாத்த தீர்மானித்துள்ளோம்.
26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி தினத்தன்று முதலாம் சாமப் பூஜை வழிபாடுகள் சரியாக மாலை 5 மணியளவில் ஆரம்பமாகும் என்பதனை சகல விரதம் அனுஷஂடிக்கும் விரதகாரர்களுக்கும் அறியத்தருகின்றோம்.
எனவே கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியவர்கள் அனைவரும் விசேட வழிபாடுகள், மற்றும் கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள அன்புடன் அழைப்பதாக ஆலய நிருவாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
