ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும், அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நேற்றும் (27) அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் புதிய இராணுவ மோதல்கள் எதுவும் பதிவாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானும் தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







