கண்டி ஹல்ஒழுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு, சிறு காயங்களுக்குள்ளாகிய இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதை அடுத்து அப்பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
