அரச ஊழியர்கள் போராட்டங்கள் செய்ய அனுமதியில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெகுசன மற்றும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில்,

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.