மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (04) அமுலுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த ஊகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் அதற்கான தீர்வினை கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.