எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையினூடாக திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி 1,65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இவ்வாறு வழங்கப்படவுள்ளன.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.