முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மோதரையில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேசபந்து தென்னகோன், தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.