முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மெளலானா மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (12) விஷேட நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, அலி சாஹிர் தனது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.
அத்துடன், அதற்கான நியமனக் கடிதத்தினையும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
