இலங்கையின் வனவிலங்குகள் தொடர்பாக இதுவரை எந்த விதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாய, வனவிலங்குகள், மற்றும் கால்நடைகள் அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ள விலங்குகளின் கணக்கெடுப்பில் குறைகள் இருக்கக்கூடும், ஆனால் அதனுடன் நிறுத்தாமல் தொடர்ச்சியாக முன்னேற்றம் செய்வது முக்கியமானது என சுட்டிக்காட்டிடுயுள்ளார்.
“ஒரே தடவையில் விமானங்கள் தயாரிக்கப்படவில்லை.
மனிதர்கள் முதலில் மரங்களின் மேலே ஏறினார்கள், மலையின் உச்சியை நோக்கி சென்று முயற்சி செய்தார்கள என தெரிவித்துள்ளார்.
அதே போன்று, இந்த கணக்கெடுப்பு வளர்ச்சியுடன் தொடர்ந்து மேற்ககொள்ளப்பட வேண்டும்,” எனவும் அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.