Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் மா அதிபராக மீண்டும் பதவியில் தேசபந்து தென்னக்கோன்?

பொலிஸ் மா அதிபராக மீண்டும் பதவியில் தேசபந்து தென்னக்கோன்?

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே தான் அவரை கைது செய்வதில் பொலிஸார் பின்வாங்கினர் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னகோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது.

தற்போது நாட்டில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபரொருவரும் இருக்கின்றார். வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளை செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபராவார்.

நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.

அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் நாடாளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். எனவே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தேசபந்து குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ முடியாது.

இவ்விவகாரத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி நாடாளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

பெப்ரவரி 27ஆம் திகதி தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மார்ச் 17ஆம் திகதி தான் அவரது வீடு பரிசோதிக்கப்பட்டது.

அதற்கு பதிலாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பஸ்நாயக்க நிலமே ஆகியோரது இல்லங்களே சோதனைக்குட்படுத்தப்பட்டன.

நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்று 20 நாட்களின் பின்னர் தேசபந்துவின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசாங்கம் அரங்கேற்றும் நாடகமே காணப்படுகிறது.

தேசபந்துவின் மனைவி சட்டத்தரணியாவார். பொலிஸார் தமது இல்லத்தை சோதனைக்குட்படுத்தப் போவதில்லை என்பதை அறிந்ததால் தான் அவர் மதுபான போத்தல்களை அப்புறப்படுத்துவதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்திகள்

இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

May 13, 2025
அம்பாறை தம்பிலுவில் கண்ணகியம்மன்ஆலய முன்றலில் கொம்பு முறிவிளையாட்டின் ஆரம்பமான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு
செய்திகள்

அம்பாறை தம்பிலுவில் கண்ணகியம்மன்ஆலய முன்றலில் கொம்பு முறிவிளையாட்டின் ஆரம்பமான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு

May 13, 2025
வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் வீசிய குண்டு; ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலர் பலி
உலக செய்திகள்

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் வீசிய குண்டு; ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலர் பலி

May 13, 2025
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ வீரர் உயிரிழப்பு!
செய்திகள்

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ வீரர் உயிரிழப்பு!

May 13, 2025
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஒய்வு
உலக செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஒய்வு

May 13, 2025
மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=
செய்திகள்

மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=

May 13, 2025
Next Post
இளைஞன் மீது அசிட் வீசிய இரு பெண்கள்

இளைஞன் மீது அசிட் வீசிய இரு பெண்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.