Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிபாய்ந்தகல் கிராமத்தில் சிங்கள குடியேற்ற முயற்சி!

புலிபாய்ந்தகல் கிராமத்தில் சிங்கள குடியேற்ற முயற்சி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவின் புலிபாய்ந்தகல் கிராமத்தில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. நாயாறுக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் கிராமத்தில் சுமார் 150 படகுகளில் வந்த சிங்கள மீனவ குடும்பங்கள் அங்கு குடியேறத் தயாராகி வருகின்றனர் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். அண்மையில், இந்தப் பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவரும் தனது குழுவினருடன் வந்து சென்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள மீனவர்களின் இந்த அத்துமீறல் தொடர்பாக அந்தப் பகுதியில் தொழில் செய்து வரும் தமிழ் மீனவர்கள் தமக்குதெரிவித்தனர் என்றும்இதையடுத்து, தான் நேரில் சென்று அவதானித்தார் எனவும் மீனவர்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார் என்றும் ரவிகரன் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், சிங்கள மீனவர்களின் இந்த அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரை அவரின் பணிமனையில் சந்தித்து உரையாடினோம். இந்த விடயம் தொடர்பாக உதவிப் பணிப்பாளர், “வெலிஓயாவில் இருக்கும் மீனவர்கள் படகுமூலம் தொழில் செய்வதற்காக புலிபாய்ந்தகல் பகுதியில் தொழில் செய்வதற்காக 4 படகுகளுக்கு அனுமதி தரும்படி கோரினர் என்றும் இதுதொடர்பாக கொழும்பில் கடற்தொழில் அமைச்சின் பணிப்பாளரை சந்திக்க செல்வதாகவும் வெலிஓயாவை சேர்ந்த மீனவர்கள் கூறியிருந்தனர் என்றும் – எம்மிடம் தெரிவித்தார்.

இதற்கு நாம், எமது மீனவர்களுக்கான இடங்கள் போதாததுள்ளது. இந்தநிலையில், குடியேற்றவாசிகளுக்கென ஒவ்வொரு இடமாக கொடுத்துக்கொண்டு போனால் எமது மீனவர்களின் நிலைமை என்ன? இப்படியான திணிப்பை எமது தமிழ் மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் சுட்டிகாட்டினோம். அத்துடன், வாடிகள் அமைப்பதற்கான அனுமதி பிரதேச செயலகத்தாலேயே வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் அவரின்
கவனத்துக்குக் கொண்டு வந்தோம் – என்றும் ரவிகரன் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
Next Post
செப்டம்பருக்கு முன்னர் தேர்தல்.

செப்டம்பருக்கு முன்னர் தேர்தல்.

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.