மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு (14) கடலுக்கு மீன்படிக்கச் சென்ற குறித்த மீனவர் இன்று அதிகாலை 3 மணியளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தூக்கக் கலக்கத்தில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தரான ஷாகுல் ஹமீத் முஹம்மத் பஷீர் என்பவரே இவ்வாறு காணாமல் சடலமாக மீட்கப்பட்டியுள்ளார்.
காணாமல் போன குறித்த மீனவரை தேடும் பணிகள் பாலமுனை மற்றும் பூநொச்சிமுனை கடல் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மதியம் காத்தான்குடி கடல் பிரதேசத்தில் சுழியோடிகளால் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
