Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டில் இன ஐக்கியத்துக்கு பாதிப்பு; அமைச்சரவைக் கூட்டத்தில் டக்ளஸ்!

தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டில் இன ஐக்கியத்துக்கு பாதிப்பு; அமைச்சரவைக் கூட்டத்தில் டக்ளஸ்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வெளியான வர்த்தமானி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன்போது துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மௌனம் காத்ததுடன் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவிக்கையில்,

“வரலாற்றுப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலருடனும் இது தொடர்பில் கலந்துரையாடினேன். அது சங்கமித்தையால் நடப்பட்டது என்பது தவறான தகவல் எனக் குறிப்பிட்டனர்” என்பதையும் அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

“நாட்டில் இன ஐக்கியம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், தொல்பொருள் திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் இன ஐக்கியம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுகின்றது” என்றும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் வர்த்தமானி தொடர்பில் பேசும்போது அமைச்சரவையில் கலந்துகொண்ட துறைசார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மௌனம் காத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் கவனம் செலுத்தி ஆராய்வதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என அப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி தேரர்கள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில், ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்த போது இதற்கு பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால், தேரர்கள் அங்கிருந்து வெளியேறி இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த
செய்திகள்

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த

June 15, 2025
உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு
செய்திகள்

உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு

June 15, 2025
தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்

June 15, 2025
Next Post
மட்டு வெல்லாவெளியில் கசிப்பு விற்பனை; நால்வர் கைது!

மட்டு வெல்லாவெளியில் கசிப்பு விற்பனை; நால்வர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.