Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது; செ.நிலாந்தன்

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது; செ.நிலாந்தன்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ஊடகவியலாளரும் செங்கலடி தளவாய் வட்டார தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான செ.நிலாந்தன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் செங்கலடி – புலையவெளி பகுதியில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான இந்த பயங்கரவாத தாக்குதலால் சுமார் 260 மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.

இன்றுவரை அவர்கள் எதற்காக கொல்லப்பட்டார்கள், ஏன் பலியானார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இன்று ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசினால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை.

கடைசியாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என கூறி மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.

அவர்களிடம் ஜனாதிபதி பதவியை கொடுத்துள்ளோம், பாராளுமன்ற பெரும்பான்மையை கொடுத்துள்ளோம் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியவில்லை. தற்போது அவர்கள் உள்ளூராட்சி சபையின் அதிகாரங்களை தங்களுக்கு தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை வைத்து செய்யமுடியாதவர்கள் உள்ளூராட்சி சபைகளை வைத்து என்ன செய்ய போகின்றனர்.

அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாகி ஒரு வருடங்கள் ஆகிய நிலையில் அவர் இந்த ஆறாவது ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்திய உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடித்து உலகிற்கு காட்டுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. ஏய்தவர்கள் இருக்கும் போது அம்புகளை கைது செய்யும் நிலையே காணப்படுகிறது.

பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இலங்கை கிரிஸ்தவ மக்களை தொடர்ச்சியாக இந்த அரசும் ஏமாற்றி வருகிறது.

தாங்க ஏன் கொல்லப்பட்டோம் எதற்காக கொல்லப்பட்டோம் என்று தெரியாமலே சில குழுக்களின் சில தேவைகளுக்காக பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமாக இருந்தால் ஏழாவது உயிர்த்த ஞாயிறு நினைவு தினத்திலாவது இந்த மக்கள் ஏன் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள்? யாருக்காக கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை கண்டுபித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
ரணிலை பார்க்காதீர்கள் அவரின் மூளையைப் பாருங்கள்; ராஜித கூறுகிறார்

ரணிலை பார்க்காதீர்கள் அவரின் மூளையைப் பாருங்கள்; ராஜித கூறுகிறார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.