யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில்–மெலிஞ்சிமுனை மயானம் அருகே, சுமார் 600 கிலோகிராம் கேரளக் கஞ்சா நேற்று (24) நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.
கடல் மார்க்கமாக கடத்தப்பட்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் தொடர்பான வழக்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவற்றை அழிக்க ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.









