இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா மற்றும் கூரிய வாள்கள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவும், மூன்று வாள்களும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டது.

சந்தேகநபர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.