Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

2 months ago
in அரசியல், செய்திகள்

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிப்போம் ; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

ஆலையடிவேம்பு பிரதேச சபையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஊழல் மோசடிகளை செய்துள்ளனர்.

எனவே நாங்கள் ஆட்சியை கைப்பற்றியதும் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தியை திட்டமிட்டு செயற்படுத்துவோம் எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவும் என அன்னாசிப்பழம் சின்னத்தில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடும் கலு ஆராச்சிகே கசுன் சம்பத் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரகுபதி தலைமையில் அன்னாசிப்பழம் சின்னத்தில் சுயேச்சைக்குழுவில் களமிறங்கியுள்ள வேட்பாளர் கலு ஆராச்சிகே கசுன் சம்பத் கடந்த (01) திகதி ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பிரதேச சபை உருவாகிய காலம் தொடக்கம் இன்று வரை ஒரு நீண்டகால திட்ட மிட்ட அபிவிருத்திகளை ஆட்சி செய்தவர்கள் செய்யவில்லை இதனால் மழை காலங்களில் எமது பகுதிகளில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று மழை வெள்ளத்தில் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்கு அடிப்படை காரணம் ஒரு திட்டமிடல் இல்லை ஆட்சிக்கு வருபவர்கள் அபிவிருத்தி என்ற பேர்வையில் வடிகான்களை அமையாது வீதியை அமைப்பர்கள் பின்னர் வடிகான்களை அமைக்கும் போது போட்ட வீதிகளை உடைப்பார்கள் இவ்வாறு ஒரு திட்டமிடல் இல்லாது அபிவிருத்தி என்ற பேர்வையில் பல மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளனர்.

கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை புதிதாக உருவாக்கப்பட்ட போது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குள் இருந்த சுமார் 50 தமிழ் குடும்பங்களை அவர்களது எல்லைக்குள் உட்புகுத்தி ஆலையடிவேம்பு பிரதேச எல்லையை அபகரித்தனர்.

அப்போது ஆட்சி செய்தவர்கள் இதை தடுத்து நிறுத்தாது வாய்கட்டி மௌனிகளாக இருந்தனர் இவ்வாறு எமது பிரதேச எல்லைகள் தினம் தினம் அபகரிக்கப்பட்டு வருகின்றது.

எனவே இந்த நில அபகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் அத்துடன் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காது ஒரு நீண்ட கால நிலையான அபிவிருத்திக்கு திட்டமிட்டு அதனை செயல்படுத்துவதன் மூலம் தான் எமது பிரதேசத்தில் ஏற்படும் மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

ஆகவே எமது பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் ஊழல் மோசடியற்ற அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் ஒவ்வொரு தமிழ் மக்களும் சிந்தித்து எமது சின்னமான அன்னாசி பழத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் நாங்கள் இளைஞர்கள் எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ்வதற்கான அபிவிருத்தியை மேற்கொள்ளுவோம். என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilanka

தொடர்புடையசெய்திகள்

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்; பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்
உலக செய்திகள்

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்; பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்

June 18, 2025
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையேற்ற இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி
செய்திகள்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையேற்ற இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி

June 18, 2025
வாட்ஸ்அப்பில் இனிமேல் ஸ்டேட்டசுக்கு இடையில் விளம்பரங்கள்; மெட்டாவின் திட்டம்
செய்திகள்

வாட்ஸ்அப்பில் இனிமேல் ஸ்டேட்டசுக்கு இடையில் விளம்பரங்கள்; மெட்டாவின் திட்டம்

June 18, 2025
சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
செய்திகள்

சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

June 18, 2025
இனியும் ஸியோனிஸ்ட்டுளுக்கு இரக்கம் காட்ட முடியாது; அயதுல்லாஹ் அல் கொமெய்னி
உலக செய்திகள்

இனியும் ஸியோனிஸ்ட்டுளுக்கு இரக்கம் காட்ட முடியாது; அயதுல்லாஹ் அல் கொமெய்னி

June 18, 2025
எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது; யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
செய்திகள்

எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது; யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

June 18, 2025
Next Post
தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.