உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 19 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தின் போதே இந்த பாலியல் வன்கொடுமை நடந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெரியவந்துள்ளது .
இதேவேளை இம் முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே மேற்படி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர் என குறிப்பிடப்படுகின்றது .