பெலரூஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த (04) இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்பவரின் வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
‘லொக்கு பெட்டி’யிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெலிபென்ன தர்கா நகரத்தில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

‘லொக்கு பெட்டி’ 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவின் போது சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஆவார்.
இது தொடர்பில் மேல்மாகாண தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








