Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் போலி முகவர் கைது!

மட்டக்களப்பில் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் போலி முகவர் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில், டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தைவாங்கி ஏமாற்றிய போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், காத்தான்குடிநாவற்குடா பகுதியில் அவரது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்தபோது, குறித்த
வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்ட நிலையில் அங்கு பதற்றமானதொரு சு+ழ்நிலையும்
ஏற்பட்டது.இதன்போது, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த போலி முகவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரபல நிறுவனம் ஒன்றின் சந்தைபடுத்தல் குழு தலைவர் என்ற போலி அடையாள அட்டையொன்றை காண்பித்தே பொது மக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்த அடையாள அட்டையை காட்டி டுபாய்க்கு குறித்த நிறுவனத்தின் அனுசரணையுடன் குறைந்த செலவான 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வேலைக்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சின்ன ஊற ணியைச் சேர்ந்த 40 பேர் குறித்த போலி முகவிரிடம் ஒருவருக்குதலா ஒரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் 48 இலச்சம் ரூபாய் பணத்தை சட்டத்தரணி ஊடாக ஒப்பந்தம் செய்துகொண்டு பணத்தை வழங்கியுள்ளார்.

இவ்வாறு கிளிநொச்சி முழங்காவில், மட்டக்களப்பு, கல்லடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, கொக்குவில் உட்படபல்வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 150 இற்கும் மேற்பட்டவர்களும் குறித்த போலி முகவரிடம் பணம் வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டிட மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து அங்கு அனைவரையும் வரவழைத்து அவர்களின் ஆவணங்களை பரிசோதனை செய்து ஒரு போலி ஒப்பந்தம் செய்து கொண்டு, முதலில் ஓரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபாவை முற்பணமாக செலுத்துமாறும் மிகுதியை வெளிநாடு சென்றதும் தரவேண்டும் என தெரிவித்தும் 3 வங்கி கணக்குகளை வழங்கி அதில் பணத்தை வைப்பு செய்யமாறுகுறித்த முகவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பலர் குறித்த வங்கி கணக்கில் பணத்தை வைப்பு செய்ததுடன் சிலர் நேரடியாக போலி முகவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.எனினும் பணத்தை கொடுத்து 7 மாதங்களாகியும் டுபாய்க்குஅனுப்பாது இவர் ஏமாற்றி வந்த நிலையில், டுபாயில் உள்ள பிரதான நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டார் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே பாதிக்கப்பட்ட 60 இற்கும் மேற்பட்டோர் குற்ற விசாரணைண பிரிவு காரியாலயத்தின் முன்பாக ஒன்று கூடி குறித்த நபரை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.மேலும், ஒருகுழுவினர் முகவரின் நாவற்குடா வீட்டை முற் றகையிட்டு அவரை பிடித்து கொண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சுமார் 150 க்கு மேற்பட்வர்களிடம் 2 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை; ஜீவன் உறுதி!

மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை; ஜீவன் உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.