ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட ஏழு புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளன.
பொது போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த நவீன பஸ்கள், பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) சேவைகளில் இணைக்கப்படவுள்ளதுடன், அதிகளவிலான பயணிகள் பயன்படுத்தும் முக்கிய நகர்ப்புற மற்றும் தொலைதூரப் போக்குவரத்து வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பொது போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.









