தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் டிஜிட்டல் EPF தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிரதேச, மாவட்ட மற்றும் உப தொழிலாளர் அலுவலகங்களிலும் EPF கொடுப்பனவுகள், பதிவுகள் மற்றும் டிஜிட்டல் EPF கட்டமைப்புடன் தொடர்புடைய சேவைகள் குறித்த இரண்டு நாட்களிலும் வழங்கப்படமாட்டாது.
மேலும், அந்த நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்கூட்டியே நேரம் ஒதுக்கியுள்ளவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தங்களுக்கு வசதியான ஏதேனும் ஒரு அலுவலக தினத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.








