ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமைக்காக குற்றவாளிகள் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது.
பேருவளைப் பகுதியைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 179 கிலோகிராம் ஹெரோயினைக் கொண்டு சென்றபோது மூவரும் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஐந்து குற்றவாளிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே உத்தரவிட்டுள்ளார்.