கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியை, சிசிடிவி காட்சிகளுடன் முகத்தை ஒப்பிடுவதற்காக அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்ற அனுமதி கோரியுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி அவரை அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலைத் திட்டம், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய சந்தேகநபர்களுடனான தொடர்புகள் தொடர்பான அறிக்கைகளையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.








