பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று (16) நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலாக உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருப்பதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி, ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதேசமயம் இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.