மட்டக்களப்பு முகத்துவரம், சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை (19) மீட்கப்பட்டுள்ளது.
மாமாங்கம் 01 ஆம் குறுக்கை சேர்ந்த தங்கவடிவேல் சுதர்ஷன் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் வெளியில் சென்று விட்டுவருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு வராத நிலையில், இன்று அதிகாலை அவரை குடும்பத்தினர் தேடிவந்த நிலையிலேயே மேற்கண்டவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் சம்பவ இடத்தில் இருந்த மீன் வியாபாரி ஒருவர் குறித்த நபரை தான் 5.30 மணியளவில் சம்பவ இடத்தில் பார்த்ததாகவும், அந்நேரம் அவர் அங்கும் இங்கும் நடந்து திரிவதை தான் கண்டதாகவும் தகவல் தெரிவித்தார்.
அதேசமயம் சம்பவம் தொடர்பில் மட்டு கொக்குவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் மட்டு நகரசபை ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








