சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் இன்று (01) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் அளவு தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், உணவகம் முழுமையாக தீக்கிரையாகி எரிந்து சேதமடைந்த பின்னரே கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் தாமதமான செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாரிய வர்த்தக மையமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவசரகால சேவைகளை வலுப்படுத்தும் வகையில், தீயணைப்புப் பிரிவின் செயல்திறனை மேம்படுத்த உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்களும் வர்த்தகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.








