இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் கூட்டு நடவடிக்கையின் போது தெற்கு கடல் எல்லை ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகுகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.
இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நேற்று (27) தடுத்து வைக்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளில் ஹெராயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட சுமார் 450 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர்கள் டோண்ட்ராவைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
கடற்படையால் கையகப்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், அதிக அளவு போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் நேற்று கைது செய்யப்பட்டன.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.