அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் விரைவாக தீர்ப்பதற்காக நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிப்பது சரியான தீர்வாக அமையாது என ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் நிலவும் வழக்கு தேக்க நிலையை குறைப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்இ நிர்வாக நடைமுறைகளை சீரமைத்தல் மற்றும் நீதித்துறையில் காணப்படும் ஊழியர்களின் பற்றாக்குறையை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளே அவசியம் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேலும்இ நீதிபதிகளின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிப்பை முன்னெடுப்பதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும்இ சட்டத்துறை மற்றும் நீதித்துறை தரப்பினரின் கருத்துகளைப் பெற வேண்டும் எனவும் ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.










