நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (28) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாளை (29) காலை 10 மணி வரை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தில் கங்கைஹலகோரள மற்றும் பஸ்பகேகோரள ஆகிய பகுதிகளுக்கு நிலை 01 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.