முல்லைத்தீவு- விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 21 மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாகவே, மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.
இருப்பினும் ஏனைய வகுப்புக்களை சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.