Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு; பிள்ளையான் தரப்பு எச்சரிக்கை!

சாணக்கியனுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு; பிள்ளையான் தரப்பு எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எமது கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சந்திரகாந்தனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொடர்ச்சியாக பொது இடங்களிலும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும், உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து வருவதனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை(14.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அண்மையில் எமது கட்சியையும் அதனுள் உள்ளீர்த்து தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

குறிப்பாக எமது அரசியல் இருப்பை அழிக்கும் நோக்குடனும் குண்டு வெடிப்புடன் சம்பந்தபடுத்திய கூற்றுக்கு எதிராகவும் நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

நாட்டின் அதிபரின் வேண்டுகோளின் பெயரில் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக எமது கட்சியின் தலைவர் அது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் அதிபரிடம் கையளித்துள்ளார்.

அதில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் அவை மத்திய அரசாங்கத்துக்கு உரிய அதிகாரங்களை என அவை வரையறுக்கப்பட வேண்டும் எனவும். ஏற்கனவே மீளப் பெறப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் 13வது திருத்தச் சட்டத்தின்படி அவை வழங்கப்பட வேண்டும்.

மாகாண சபை கலைக்கப்பட்டால் தேர்தல் சட்ட திட்டத்தின்படி அடுத்த மாகாண சபைக்குரிய அமர்வு தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர மத்திய வங்கி அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட ரீதியான அபிவிருத்திகளை முன்னெடுக்க துறைசார் அதிகாரிகளை நியமிப்பதும், மாவட்ட செயலாளரை நியமிப்பது, சம்பந்தமாகவும் மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும், எனவும் நாம் தெளிவாகக் கூறியிருக்கின்றோம்.

நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்க இந்த 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நமது கட்சி நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
Next Post
உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை!

உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.