மது போதையில் லாரியை செலுத்திய சாரதி ஒருவரை இன்று (04) இரவு மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த குறித்த லாரி கல்லடியில் பகுதில் ஓரமாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது போதுண்டதில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
லொறிவண்டியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் முன்பாக பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதன் போது லாரி சாரதி மது அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்டையில் உடனடியாகப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













