“தெய்வீக கிராம நிகழ்வு” என்னும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி . தெட்ஷணகௌரி தினேஷ் தலைமையிலான விசேட நிகழ்வொன்று கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்றது.
பிரதேச செயலக சர்வ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகி நிகழ்வு திருநீற்றுக்கேணி செல்வ விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலய பூசை, கோமாதா பூசை ,மரநடுகை என்பன ஆலய நிகழ்வுகளாக இடம்பெற்றதுடன் நந்திக் கொடி ஏற்றல், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பனவற்றுடன், சைவப்புலவரும் சைவ பண்டிதருமாகிய யோ.கஜேந்திரா ஐயா அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட ஆக்கத்திறன் போட்டிகளுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு இறுதியில் அன்னதானம் வழங்குதலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.















