ஜுன் 5 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று 05 மரநடுகை மற்றும் சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணக் கெளரி தினேஷ் ஆலோசனைக்கு அமைவாக ஆரையம்பதி கிழக்கு மட்/நவரெட்னராஜா பாடசாலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வினை பாடசாலை அதிபர் தலைமையேற்று நடாத்தினார் , அத்துடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர், பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் 20 மரக்கன்றுகள் பாடசாலை மைதானத்தில் நடப்பட்டதுடன், அதற்கான கூடுகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் ஆக்கதிறன் கண்காட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறுவர் நிகழ்ச்சிகள் என்பன சிறப்பான முறையில் இடம்பெற்றது.
அதேசமயம் மண்முனைப்பற்று சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இம்மர நடுகை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


























