Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்/ புனித மிக்கேல் கல்லுாரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்!

மட்/ புனித மிக்கேல் கல்லுாரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கான நிரந்தர அதிபர் நியமனமானது நேற்று (15.08.2023) இலங்கை கல்வி நிருவாக சேவையை சேர்ந்த திரு. அன்ரன் பெனடிக் யோசப் அவர்களுக்கு இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே கல்லுாரி அதிபராக கடமையாற்றியிருந்த திரு. பயஸ் ஆனந்தராஜா அவர்கள் கடந்த வருடம்(2022) டிசம்பர் 30 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் பிரபாகரன் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டடிருந்தார்.

இதே வேளை கல்வி அமைச்சினால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதியன்று இலங்கையில் உள்ள 17 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுகான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜுலை 21 ஆம் திகதி நேர்முகப்ரீட்சை இடம்பெற்றதுடன் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முறையான அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான திரு.அன்ரன் பெனடிக் யோசப் அவர்கள் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2016 ஆம் இணைந்து கொண்டவர். இவர் தனது பாடசாலை, பல்கலைக்கழக காலங்களில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்ததுடன் மும்மொழிச் தேர்ச்சியும் பெற்றவர் என்பதோடு பட்டப்படிப்பின் பின்னர் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிருவாக துறையில் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர்.

மேலும் கல்வி நிருவாக சேவை நியமனத்தில் முதன்மை நிருவாகிய தெரிவு செய்யப்பட்டர் என்பதோடு தற்போது வடமத்திய மாகாண அனுராதபுரம் கல்வி வலயத்திற்கான நிருவாக பணிப்பாளராக கடமையாற்றி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னணிப் பாடசாலையாக கருதப்படும் புனித மிக்கேல் கல்லுாரிக்கு நீண்ட காலம் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாமல் இருந்தது அதன் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுமே என மட்டக்களப்பு மக்கள் அஞ்சியிருந்த நிலையில் இன்று கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நியமனம் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
செய்திகள்

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

June 9, 2025
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 9, 2025
பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
Next Post
மரம் விழுந்ததால் தெஹிவளை மிருகக்காட்சிசாலை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு!

மரம் விழுந்ததால் தெஹிவளை மிருகக்காட்சிசாலை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.