அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, இந்திய விண்வெளி நிலையமான இஸ்ரோ ஆகியவை இணைந்து அக்சியம் ஸ்பேஸ் அக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ரொக்கெட் மூலம் ட்ராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

கடைசியாக 11-ம் திகதி ரொக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஒக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய திகதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் 19-ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்று இஸ்ரோ அறிவித்தது. .
இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் வரும் 22ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசாதெரிவித்துள்ளது.